1. விவசாய தகவல்கள்

வேளாண் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 1 lakh fund for youth to start agricultural business!

வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இயற்கை வேளாண்மைப் பாதுகாக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்!

  • 12 கோடி ரூபாயில் மரம் வளர்ப்பு திட்டம்

  • எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • ஆடு,மாடு, கோழி உளளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை உஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 2500 இளைஞர்களுக்கு விவசாய திறன் பயிற்சி

  • துவரை சாகுபடி சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்

  • சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்த இரண்டு சிறப்பு மண்டலங்கள்

  • வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

  • இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி

  • நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட 10 கோடி நிதி

  • மானியத்தில் வேளாண் கருவி வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நிதி

  • மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி ஒதுக்கீடு

  • குறுவை சாகுபடியால் டெல்டா விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. இது 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனை

  •  காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் படிக்க...

பளபளக்கும் பப்பாளி-ஆண்மைத்தன்மையை பாதிக்கும்!

இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!

English Summary: Rs 1 lakh fund for youth to start agricultural business! Published on: 19 March 2022, 11:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.