1. விவசாய தகவல்கள்

தீவிர புயலாக மாறுகிறது ஷாகீன் - தமிழகத்திற்கு ரெட் அலேர்ட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Shakeen turns into a serious storm - Red Alert for Tamil Nadu!
Credit : Dinamalar

அரபிக் கடலில் உருவாகியுள்ள ஷாகீன் புயல் இன்று தீவிர புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் 4ம் தேதி வரை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஷாகீன் புயல் (Shakeen Storm)

அரபிக் கடலில் உருவான 'ஷாகீன்' புயல், குஜராத்தின் துவாரகாவில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 400 கி.மீ., தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து தெற்கு, தென்மேற்கே 260 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும். இதனால், மீனவர்கள் அக்டோபர் 4ம் தேதி வரை வட அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையேச் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அதி கனமழை

இலங்கையை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 3 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மிக கனமழை ( Very heavy rain)

இதேபோல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கனமழை ( heavy rain)

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மழை (Rain)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழை பதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

வங்கக்கடல் பகுதிகள்  (Areas of the Bay of Bengal)

2.10.21 முதல் 3.1021 வரை

தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மழைக்காலங்களில் பாம்புகளிடம் இருந்து தப்புவது எப்படி? முழு விபரம் உள்ளே!

3 நாட்களில் 2.37 லட்சம் மரக்கன்றுகள்- நடவு செய்த விவசாயிகள்!

English Summary: Shakeen turns into a serious storm - Red Alert for Tamil Nadu! Published on: 02 October 2021, 02:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.