1. வாழ்வும் நலமும்

வீட்டுச் சுவர்களை பசுமையாக்கும் செங்குத்து தோட்டம்-பட்டதாரி இளைஞர் !

Dinesh Kumar
Dinesh Kumar
Garden to green the walls of the house...

தூத்துக்குடியை சேர்ந்த டி.விஜய் மணி (29) என்பவர் செங்குத்து தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் விலங்கியல் துறையில் பிஎஸ்சி முடித்தார். தற்போது செங்குத்து தோட்டக்கலை தொழில் அவரை இளம் தொழிலதிபராக மாற்றியுள்ளது.

மண்புழு உரம்:

கல்லூரியில் படிக்கும் போது, மண்புழு உரம் தயாரிப்பது துணை பாடமாக கற்பிக்கப்பட்டது. அப்போது, வீட்டில் மண்புழு உரம் தயாரித்து, சைக்கிள் ஓட்டி, வீடு வீடாக விற்பனை செய்தேன். அப்போது சிலர் வீட்டுத்தோட்டம் அமைத்துத் தரும்படி கேட்டனர்.

மண்புழு உரம்:

கல்லூரியில் படிக்கும் போது, மண்புழு உரம் தயாரிப்பது துணை பாடமாக கற்பிக்கப்பட்டது. அப்போது, வீட்டில் மண்புழு உரம் தயாரித்து, சைக்கிள் ஓட்டி, வீடு வீடாக விற்பனை செய்தேன். அப்போது சிலர் வீட்டுத்தோட்டம் அமைத்துத் தரும்படி கேட்டனர்.

இப்படித்தான் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது 26 வீட்டுத்தோட்டங்கள், மொட்டை மாடிகள், பால்கனிகள் அமைத்து பராமரித்து வருகிறேன். அதேபோல் சென்னையிலும் பெங்களூரிலும் தலா 4 வீடுகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன்.

இயற்கை விவசாயம்:

தோட்டம் அமைக்க ரூ.150க்கு பை வாங்குவேன். இதில் பை, உரம், தேங்காய் நார் கழிவுகள், விதைகள் அடங்கும். பழுதடைந்த செடிகளுக்கு உரமிட்டு மாற்றுவதற்கு பராமரிப்புக்கு ரூ.500 வசூலிக்கிறேன். காய்கறிகள், எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி போன்றவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன்.

அழகு தாவரங்கள்:

தூத்துக்குடியில் 5 வீடுகளில் செங்குத்து தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன். இதற்காக ஓசூர், புனே போன்ற இடங்களில் இருந்து அலங்கார செடிகளை கொண்டு வருகிறேன். பிளாஸ்டிக் பெட்டிகளால் சுவர்களை வடிவமைத்து செடிகள் வளர்க்கப்படுகின்றன. சொட்டுநீர் அமைப்பில் தண்ணீர் வழங்கப்படுகிறது. பலர் தங்கள் வீடுகளுக்குள் செங்குத்து தோட்டங்களையும் அமைத்துள்ளனர். சிலர் சுவர் முழுவதையும் பச்சையாக மாற்றச் சொல்வார்கள். அதன்படி கட்டணத்தை நிர்ணயம் செய்வேன்.

இளைஞர்களுக்கான வேலை:

என்னிடம், 7 இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கொடுக்கிறேன். அதுமட்டுமின்றி, மாதம் ரூ.40,000 வரை சம்பாதிக்கிறேன். 2016-ம் ஆண்டு எனக்கு வஉசா கல்லூரி சார்பில் இளம் தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டது. இந்தத் தொழிலை விரிவுபடுத்தி அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே எனது லட்சியம். இவ்வாறு விஜய் மணி கூறினார்.

மேலும் படிக்க:

1 லட்சம் தேக்கு மரக்கன்றுகள் நடும் பணி! பசுமையாக்கும் திட்டத்தில் வனத்துறை ஏற்பாடு!

அடர்வனம் அமைக்கும் திட்டம் - இணைய அழைப்பு!

English Summary: Vertical garden to green the walls of the house! Published on: 20 April 2022, 09:45 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.