1. செய்திகள்

PF: அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
EPFO Higher Pension

EPFO நிறுவனத்தின் தொழிலாளர் பென்சன் திட்டத்தின் (EPS) கீழ் அதிக பென்சன் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டு பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு EPFO ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூட்டு விண்ணப்பம்

அதிக பென்சன் பெறுவதற்கு கூட்டு விண்ணப்பம் தாக்கல் செய்தபின் அந்த விண்ணப்பத்தை EPFO அலுவலகங்கள் ஆய்வு செய்யும். தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும், நிறுவனத்தால் ஊதிய விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அதை EPFO சரிபார்க்கும். விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு நிலுவை கணக்கிடப்பட்டு அதை செலுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பயனாளியின் விண்ணப்பத்திலும், நிறுவனம் சமர்ப்பித்த தகவல்களிலும் விவரங்கள் ஒத்துப்போகவில்லை எனில், இதுகுறித்து EPFO அலுவலகத்தால் பயனாளிக்கும், நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும். விவரங்களை சரிபார்த்து சரிசெய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும்.

கால அவகாசம்

கூட்டு விண்ணப்பத்துக்கு பயனாளி வேலை செய்த நிறுவனம் ஒப்புதல் அளிக்கவில்லை எனில், விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு முன் நிறுவனம் உரிய விவரங்கள், சான்றுகளை வழங்கவும், தவறுகளை சரிசெய்வதற்கும் ஒரு மாத காலத்துக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த கால அவகாசம் குறித்த விவரம் பயனாளிகளுக்கும் தெரிவிக்கப்படும்.

நிறுவனம் சமர்ப்பித்த விவரம் முழுமையாக இல்லை என்றாலும், ஏதேனும் தவறுகள் இருந்தாலும், நிறுவனம் சரியான விவரங்களை வழங்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின் விவரங்கள் சரிசெய்யப்பட்டால் நிலுவை தொகை செலுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மேலும் படிக்க

PM kisan: 14வது தவணை எப்போது கிடைக்கும்: எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள்!

LIC-யின் ஒரே ஒரு பிரீமியம் போதும்: வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும்!

English Summary: PF: Important Notice for Higher Pension Applicants! Published on: 24 April 2023, 02:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.