1. செய்திகள்

கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்களை பின்பற்ற தயார்- பொன்முடி பேச்சு!

Dinesh Kumar
Dinesh Kumar
Follow the good aspects of education policy-Minister Ponmudi....

கோவை பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ் விழாவில், 1687 முனைவர் பட்ட மாணவர்களுக்கும், 267 முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்கள் நேரடியாக வழங்கப்பட்டது.

1,50,424 இளங்கலை பட்டங்களும், 1,504 எம்ஃபில் பட்டங்களும், 48,034 முதுகலை பட்டங்களும் மொத்தம் 2,04,362 மாணவர் பட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், அவர்கள் இருக்கும் துறையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றார். 2,40,445 பட்டதாரிகளில், அதிகபட்சம் பெண்கள் தான். 'கல்வியில் சிறந்த தமிழகம்' என்ற பாரதியார் பாடல்களை கவர்னர் அடிக்கடி பாடுவார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

கல்வித் துறை மற்றும் தொழிலாளர் துறை ஆகியவை இணைந்து மாணவர்கள் படிக்கும் போது அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்கின்றன. ஆண்களை விட பெண் பட்டதாரிகள் அதிகமாக காணப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்று சொல்லப்பட்ட காலம் இருந்தது. இன்று பெண்கள் எல்லாம் துறையிலும் படிக்க மட்டும் சிறந்தும் விழங்குகின்றனர். இதுதான் திராவிடியன் மாடல் மற்றும் இதைத்தான் பெரியார் மண் என்று சொல்வார்கள் என பெருமையாக கூறினார்.

மேலும் அவர், நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல, மேலும் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந்தி திணிப்பு இருக்க கூடாது என்பதை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம் என்றார்.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால் நாங்கள் மாநிலக் கல்விக் கொள்கையைப் பின்பற்றுகிறோம், மற்றும் எங்களின் உணர்வுகளை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். ஹிந்தி தேர்வு மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கையாகும்.

எந்த மொழியையும் கற்க தயாராக உள்ளோம். ஆனால், அது மூன்றாம் மொழியாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஆங்கிலம் சர்வதேச மொழியாகவும், தமிழ் தாய் மொழியாகவும் மட்டும் தான் இருக்க வேண்டும். ஹிந்தி திணிப்புக்கு அண்ணா சொன்ன ஒரு சிறுகதையைச் சொன்ன பொன்முடி, ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்கிறார்கள் என்றார்.

மேலும் படிக்க:

தமிழில் பொறியியல் கல்வி படிக்க வாய்ப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

கல்விக் கொள்கை: தமிழகத்திற்கு ஒரு சோதனையாக மாறியுள்ளது!

English Summary: Ready to follow the good aspects of education policy- Minister Ponmudi! Published on: 13 May 2022, 05:24 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.