1. செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள்: வனத்துறையினர் பறிமுதல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Sea Cucumber seized

கடலில் கிடைக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று தான் கடல் அட்டைகள். இவற்றை பிடிக்கவும், விற்பனை செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடல் அட்டைகளில், அரிய மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் சர்வதேச சந்தைகளில் நல்ல விலை உண்டு. உலகம் முழுவதும் கடல் அட்டைகளுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கடல் அட்டைகள் (Sea Cucumber)

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகில், இருமேனி பகுதியில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது‌. கடல் அட்டைகளை கடத்துவது சட்ட விரோதம் எனத் தெரிந்தும், சிலர் பணத்திற்காக இச்செயலை செய்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு கடல் அட்டைகளை கடத்துவதற்கு தடை விதித்துள்ளது‌. இருப்பினும் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

வனத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட கடல் அட்டைகளை அடையாளம் கண்டு, ஆட்டோவை வனத்துறையினர் மடக்கினர். பிறகு, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 450 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றி, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஒரு கடத்தல் சம்பவம், இதே இராமநாதபுரத்தில் கடந்த மே மாதம் நிகழ்ந்துள்ளது‌. பட்டனம் காத்தான் பகுதியில், காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருந்த போது இச்சம்பவம் நடந்தது. அப்போது, சுமார் 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரை கைது செய்தனர்.

கடல் அட்டைகளை கடத்தும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுவதால், வனத்துறையும், காவல் துறையும் இது சார்ந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

வேளாண் கழிவுகளில் இருந்து பயோ எத்தனால்: சென்னை ஐஐடி கண்டுபிப்பு!

குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்: இணையத்தில் வைரல்!

English Summary: Sea Cucumber tried to be smuggled to Sri Lanka: Forest Department seized Published on: 11 July 2022, 08:52 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.