1. செய்திகள்

தொடங்கியது தென் மேற்குப் பருவமழை- 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Southwest monsoon begins - Chance of heavy rain in 10 districts!
Credit : News 18

கேரளா மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இன்றுத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தின் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Atmospheric overlay circulation)

வெப்பச்சலனம் மற்றும் தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

03.06.2021

இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை (Moderate rain)

  • அதேநேரத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.06.2021

தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

05.06.2021

டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இலேசான மழை (Light rain)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

  • சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் நாவலூரில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

03.05.2021

குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் குறிப்பிட்ட இந்த நாட்களில், இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

03.06.2021 முதல் 05.06.2021 வரை

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரளக் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடங்கியது பருவமழை (Monsoon started)

கேரளா மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில்  இன்று தென் மேற்கு பருவமழை பகுதிகளில் இன்று தொடங்கியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

English Summary: Southwest monsoon begins - Chance of heavy rain in 10 districts! Published on: 03 June 2021, 01:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.