1. செய்திகள்

ஃபனி புயல் ஒடிசா நோக்கி செல்கிறது: தமிழகம், ஆந்திர, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

KJ Staff
KJ Staff

ஃபனி புயல் வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இப்புயலானது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. மே 3 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஃபனி புயலானது தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து தற்போது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. புயலின் வேகம் குறைந்த பட்சமாக 170 km இல் இருந்து 180 Km வரை  இருக்கும் . அதிகபட்சமாக 195 Kmஇல் இருந்து 205 Km வரை செல்லும். அதிதீவிரமாக இருப்பதினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 தமிழகம், ஆந்திர, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும்  என எதிர்பார்க்க படுவதினால் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குமரி மாவட்டம், மன்னர் வளைகுடா போன்ற பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஒடிசா அருகில் கரையை கடக்கும் என்பதினால், கரையோர மாவட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில இருக்கும் படி அறிவுறுத்த பட்டுள்ளனர்.    

இந்திய கப்பற்படை மற்றும் விமான படை தயார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில குழுவுடன் தொடர்பில் உள்ளது. முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக முகாம்கள், உணவு, ரப்பர் படகுகள், ஹெலிஹாப்டர் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.

மத்திய அரசு  ஃபனி புயலினை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி உதவி வழங்கியுள்ளது. தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு சுமார் 1086 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 309 கோடி ஒதுக்கியுள்ளது.     

 

English Summary: Tamil Nadu, Andhra, Odisa and West Bengal Under Alert: 'Fani Cyclone' Warning Published on: 01 May 2019, 12:09 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.