மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 July, 2021 10:42 AM IST
Covid 19

மத்திய அரசிடம் தமிழக அரசு தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று  ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்று நேரடியாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசிப்பதாக இருந்தது. இதற்கிடையில் மத்திய மந்திரி சபை மாற்ற ஏற்பட்டதால் பயணம் தள்ளிப் போனது.

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றார். மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக தமிழகத்திற்கு  தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது, கருப்பு பூஞ்சை மருந்தைக் கூடுதலாக பெறுவது போன்ற பல பிரச்சனைகள் குறித்து பேசினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது,மத்திய அரசிடம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து  எடுத்துரைத்ததாகவும், கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்தியதாகவும்,மேலும் வரும் 12ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுப்படுத்துதல் மற்றும் தமிழகத்திற்கான கொரோனா நிதியை அதிகரிப்பது குறித்து வலியுறுத்துதல் ,அதனை தொடர்ந்து புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும்படி கேட்கப்பட்டதாக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?

English Summary: Vaccine shortage in Tamil Nadu: There is no vaccination camp in Chennai - Chennai Corporation announcement
Published on: 10 July 2021, 10:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now