1. மற்றவை

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு: மத்திய அரசு ட்விஸ்ட்!

R. Balakrishnan
R. Balakrishnan
Calculation of Allowance

ஜூலை - டிசம்பர் அரையாண்டு தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு குறித்து முக்கிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு (Allowance Hike)

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் விலைவாசி உயருகிறது. எனவே, விலைவாசியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என அரையாண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது

மொத்த விலை பணவீக்கம் (WPI) 15.8% ஆக 30 ஆண்டு உச்சத்தில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 3% ஆகவே இருக்கிறது. மொத்த விலை பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி விகிதம் உயர்த்தப்படுமா என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி நரன்பாய் ரத்வா கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி, 2022 மே மாதம் மொத்த விலை பணவீக்கம் 15.88% ஆக இருந்தது. ஆனால் ஜூன் மாதம் 15.18% ஆக குறைந்துவிட்டது. அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் சில்லறை பணவீக்கம் (AICPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படும்; மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் கணக்கிடப்படாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

EPFO: இணையத்தில் கசிந்த தகவல்கள்: பென்சனர்கள் அதிர்ச்சி!

ஓய்வூதியம் வாங்குவோர் இதை செய்யக்கூடாது: வெளியானது திடீர் உத்தரவு!

English Summary: Calculation of allowances for government employees: Central government twist! Published on: 05 August 2022, 06:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.