1. செய்திகள்

விவசாயிகளுக்கு லாபம்|e-NAM|முட்டை விலை உயர்வு |பசுமை ஆட்டோ|மழை

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

1.e-NAM மூலம் தக்காளி விற்பனை - விவசாயிகளுக்கு லாபம்|கொப்பரை கொள்முதல்

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விவசாயிகளின் லாபத்தை மேம்படுத்த, வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகம் தலா 1,000 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புடன் (FPO) இணைந்துள்ளது. e-NAM மூலம் தக்காளி விற்பனையில் விவசாயிகள் லாபம் பார்த்து வருகின்றனர்.


பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தக்காளியின் விலை மோசமாக உள்ளது மற்றும் விவசாயிகள் இடைத்தரகர்களால் சுரண்டப்படுகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய AGDAB-யின் (Agriculture Marketing Department and Agri-Business) உதவியை நாடினர், அதைத் தொடர்ந்து, இரண்டு FPG-கள் தினமும் 6.1 டன் தக்காளியை e-NAM மூலம் சேலத்தில் உள்ள சந்தைகளுக்கு வழங்கி வருகின்றன. இதனால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

2.முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளில் இருந்து 20 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்ட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 20 காசுகளாகவும் கடந்த 22ம் தேதி மீண்டும் 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

3. குறைந்த விலையில் கொப்பரை கொள்முதல்

திருச்சியில் முதன்முதலாக, துவரங்குறிச்சி சந்தையை நெறிப்படுத்தியதால், குறைந்த விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 5,115 ஹெக்டேருக்கு மேல் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடும் போது, கொப்பரைக்கான சந்தை கொள்முதல் விலை கிலோ ரூ. 85-க்கும் கீழ் குறைந்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2 ஆண்டுகளாக சந்தை விலை குறைவால் அவதிப்படும் தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மாவட்டத்தில் முதல்முறையாக வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத்துறை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரையை கொள்முதல் செய்ய உள்ளது. துவரங்குறிச்சியில் உள்ள அதன் ஒழுங்குமுறை சந்தை இந்த வாரம் முதல் பயன்படுத்தப்பட உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

4.12 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் தூர்வாரும் பணி

காவிரி டெல்டா முழுவதும் 12 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் தூர்வாரும் பணியை டபிள்யூஆர்டி தொடங்க உள்ளது. மின்கம்பத்தை பலப்படுத்துதல், புதர்களை அகற்றுதல் உட்பட மொத்தம் 696 பணிகளை மேற்கொள்ள துறை திட்டமிட்டுள்ளது. இது மொத்தம் 4,720 கி.மீ., 6.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காவிரி படுகையில் ஏப்ரல் மாத இறுதிக்குள் தூர்வாரும் பணியை தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், 90 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ள, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதி வரை தடையின்றி பாசனக் கால்வாய்களுக்குச் சென்றடையும் வகையிலும், வெள்ள நீர் விரைவாக குறையாமல் இருக்கவும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Profit for Farmers|e-NAM|Egg Price Rise |Green Auto|Rain

5. திருப்பதியில் பசுமை ஆட்டோ

திருப்பதியில் தனது ஆட்டோவில் புற்கள், சிறு செடிகளை வளர்த்து பசுமை ஆட்டோவாக மாற்றியுள்ள ஆட்டோ டிரைவர் பாபு தான் இணையத்தில் தற்போது டிரெண்டிங்க்.

திருப்பதியில் சுற்றுக்கொண்டிருக்கும் ஆட்டோகளுக்கு மத்தியில் ஒரு சிறிய பசுமை காடு நகர்ந்து வருவது போல் தனித்து தெரிகிறது பாபுவின் ஆட்டோ. கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்தச் சூழலில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும் வெப்பநிலை தாக்கத்தால் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலையில் மற்ற ஆட்டோக்கள் மரத்தடி நிழலிலும், ஆட்டோ நிறுத்தங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த சமயத்திலும் பாபுவின் ஆட்டோ பம்பரம் போல் திருப்பதி நகரினை வலம் வருகிறது.

6.20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், நாகையில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மேலும் படிக்க

திருச்சியில் குறைந்த விலையில் கொப்பரை கொள்முதல்!

டெல்டா மாவட்டங்களில் ரூ.90 கோடியில் தூர்வாரும் பணி!

English Summary: Profit for Farmers|e-NAM|Egg Price Rise |Green Auto|Rain Published on: 25 April 2023, 01:59 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.