
தோட்டக்கலை சார்பில் சேலம் மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் குழித்தட்டு நாற்றுகளும், காய்கறி விதைகளும் வழங்கப்படுகிறது. வெண்டை, பாகல், பீர்க்கன், சுரை, கொத்தமல்லி, சிறிய வெங்காயம் போன்ற காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளின் குழித் தட்டுகள் விற்கப் படுகிறது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, சிட்டா நகல், அடங்கல், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என தெரிவித்தார்.
Share your comments