
புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளை விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.10,000
இந்த திட்டத்தில், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் பயன் பெறமுடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.
மானியம் பெறுவது எப்படி?
சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவசாயிகள் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்
வினீத்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க...
Share your comments