1. வாழ்வும் நலமும்

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
10 days of isolation is not enough - information in a new study!

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதை பிசிஆர் பரிசோதனைகள் உறுதி செய்யும் பட்சத்தில், அந்த நபர் 10 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்திக் கொள்வது போதாது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொடூரக் கொரோனா (Cruel corona)

பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது தொடர்பாக பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதிக நாட்கள் வாழும் வைரஸ் (A virus that lives for many days)

அந்த ஆய்வின்படி, பிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, ஆர்என்ஏ அடிப்படையில் ஒரு புதிய வகை பரிசோதனை செய்ததில், சில நோயாளிகளுக்கு தொற்று குறிப்பிட்ட காலத்தை தாண்டி நீடித்திருப்பது கண்டறியப்பட்டது. அது, நிலையான 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை விட அதிகமாக இருந்தது.

அதாவது, 10 நாட்களுக்குப் பிறகு, 13 சதவீத நபர்களின் உடலில் கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருந்தது தெரியவந்துள்ளது.

68 நாட்கள் வரை (Up to 68 days)

இது, அவர்கள் இன்னும் நோய்த்தொற்றுடன் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சிலருக்கு 68 நாட்கள் வரை இந்த நிலை நீடித்திருக்கிறது.

இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற எக்ஸிடர் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் லோர்னா ஹாரிஸ் கூறுகையில், ‘இது ஒப்பீட்டளவில் சிறிய ஆய்வாக இருந்தாலும், உயிர்ப்புடன் உள்ள வைரஸ் சில சமயங்களில் 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கலாம். கூடுதலாகத் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன’ என்றார்.

10 நாட்கள் போதாது

எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது என்று இந்த ஆய்வு முடிவு அறிவுறுத்துகிறது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: 10 days of isolation is not enough - information in a new study!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.