
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வீட்டு முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை மருத்துவர்கள் செவிலியர்கள் இணைந்து நடத்தினர். கர்ப்பிணிகளுக்கு முதலில் வளையல் அணிவித்து, கன்னத்தில் சந்தனம் பூசி, பன்னீர் தெளித்தும்,மலர்கள் தூவியும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு வரிசை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கர்ப்பிணி தாய்மார்கள் கூறியதாவது, “வீட்டில் முறைப்படி செய்வது போன்று எங்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மருத்துவமனைக்கு நாங்கள் வருவது, அம்மா வீட்டிற்கு வருவது போன்ற உணர்வை தரும். மருத்துவர்கள் மூலம் இந்த வளைகாப்பு நடத்தப்படுவதை கேட்டதும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Share your comments