1. செய்திகள்

முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்க கூடாது- முதலமைச்சர் உத்தரவு!!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Don't release too much water in dams without warning- CM Stalin's instruction!

தமிழகத்தில், போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஆலோசனை

இந்த நிலையில் கனமழை பெய்துவரும் 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதில், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது. இரவு நேரத்தில் தண்ணீர் அளவை வெளியேற்றத்தை அதிகப்படுத்துவதை தடுக்க வேண்டும்.

மருத்து முகாம்

அனைத்து நிலை அலுவலர்களையும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும்.

உடனடியாக அவற்றை சேமிப்பு கிடங்குகளில் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க...

10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை- விபரம் உள்ளே!

3 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட் எச்சரிக்கை- விபரம் உள்ளே!

English Summary: Don't release too much water in dams without warning- CM Stalin's instruction! Published on: 04 August 2022, 09:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.