1. செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் விதை நெல், விவரம்!!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Paddy Seeds

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வேளாண் அதிகாரி சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் பாரம்பரிய விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக நெல், நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்கு பருவமழையின் காரணமாக ஆனைமலை பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை பயிரிட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள நெல் விதைகளை வாங்க வருமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறுகையில், “ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் வகைகள் 200 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு கவுனி 60 கிலோ மற்றும் சீரக சம்பா 140 கிலோ விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும் பாரம்பரிய விதை நெல் அரசு மானிய விலையில் 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 10 கிலோ வரை நெல் விதைகள் வழங்கப்படுகிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க:

அரசு: குருவை பயிர் விதைகளுக்கு 90 முதல் 100% மானியம்

விவசாயிகளுக்கு தீபாவளிக் பரிசு, அரசு 35,250 ரூபாய் வழங்கும்

English Summary: Rice seeds for farmers at government subsidized prices, details!!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.