1. செய்திகள்

சிறையில் இயற்கை விவசாயம் செய்யும் கைதிகளை பாராட்டிய ஆளுநர்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Governor Tamilisai Soundarajan

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை காலாப்பேட்டை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.

சிறைச்சாலையில் உள்ள 36 ஏக்கரில் கைதிகள் மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயப் பண்ணை அமைத்து அங்கக உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள் , பழங்கள் மற்றும் மருத்துவச் செடிகளை உற்பத்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தை நேரில் பார்த்த துணைநிலை ஆளுநர் கைதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நடனம், இசை மற்றும் யோகா நடத்தி வரும் சிறை நிர்வாகத்தை பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தரராஜன், கைதிகளால் நிர்வகிக்கப்படும் இயற்கை விவசாய பண்ணையை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறினார் .

உழவர் சந்தையில் கைதிகளின் பொருட்களை விற்பனை செய்ய ஸ்டால் அமைக்கப்படும் என்றார் அவர்.

ஏற்கனவே தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள கைதிகளின் விடுதலை விவகாரம் மனிதாபிமான அடிப்படையில் மற்றும் சட்ட வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்படும் என்றும் லெப்டினன்ட் கவர்னர் கூறினார்.

காரைக்கால் சிறைச்சாலை கட்டி முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் அதுவரை காரைக்காலில் உள்ள கைதிகள் மத்திய சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க

Farming Business Idea: இந்த மரத்தை வளர்த்து, விரைவில் கோடீஸ்வரராகலாம்

English Summary: The governor praised the inmates who do nature farming in the prison

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.