1. செய்திகள்

PM கிசான் 14வது தவணை ஜூலையில் வெளியீடு!

Deiva Bindhiya
Deiva Bindhiya

Update on PM Kisan 14th installment coming in July!

பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதியின் 14வது தவணை வழங்கும் தேதியை அறிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 8.5 கோடி பயனாளிகளின் 14வது தவணையை ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் பிரதமர் நரேந்திர மோடி வங்கி கணக்குகளுக்கு மாற்றுவார்.

PM கிசான் தவணை தொகை:

இந்தத் திட்டம் ஆண்டு வருமான ஆதரவாக ரூ. 6000 வழங்குகிறது. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், பணம் மூன்று சமமாக தலா ரூ.2000மாக வழங்கப்படுகிறது. பயனாளியின் ஆதார் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (DBT) செயல்படுத்தப்பட்ட அல்லது ஆதார் மற்றும் NPCI-யுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் இல்லாத விவசாயிகள், உடனடியாக தங்கள் உள்ளூர் தபால் நிலையத்தை அணுகவும்.

PM கிசான் 14வது தவணை (PM Kisan 14th Installment):

PM கிசானின் 14வது தவணை தேதி விரைவில் அரசால் அறிவிக்கப்படும். அதன்படி, கடைசி தவணை பிப்ரவரி 26, 2023 அன்று வெளியிடப்பட்டதால், அடுத்த தவணை ஜூலை 30, 2023-க்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், வருகிற ஜூலை 27 வெளியாகும் என அதிகார்ப் பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

PM கிசான் eKYC:

PM Kisan வலைத்தளத்தின்படி, “PMKISAN பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.

CSC மையம் என்றால் இ-சேவை மையம் ஆகும்.

PM கிசான் பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்:

1: அதிகாரப்பூர்வ PM KISAN போர்ட்டலுக்குச் செல்லவும்
2: 'விவசாயிகளின் மூலை அதாவது Farmers corner' என்பதன் கீழ் 'பயனாளிகள் பட்டியல் அதாவது Beneficiary List' என்பதைக் கிளிக் செய்யவும்.
3: மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி, கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்
4: அதன் பிறகு'Get Report' என்பதை கிளிக் செய்யவும்

ஆன்லைனில் eKYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது:

1: PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
2: பக்கத்தின் வலது பக்கத்தில் கிடைக்கும் eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்
3: உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை அதாவது 'search' என்பதை கிளிக் செய்யவும்
4: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்
5: 'Get OTP' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP ஐ உள்ளிடவும்.

மேலும் படிக்க:

நுகர்வோருக்கு ரூ.60 மானிய விலையில் கடல பருப்பு வழங்கும் 'பாரத் தால்' திட்டம் தொடக்கம்

English Summary: Update on PM Kisan 14th installment coming in July!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.