1. மற்றவை

அக்டோபர் 1 முதல் வேலை நேரம் மாறுமா? புதிய தொழிலாளர் சட்டம் அமல்!

Aruljothe Alagar
Aruljothe Alagar

New labor law

நான்கு தொழிலாளர் குறியீடுகள் பொருந்தினால், நீங்கள் அதிக பிஎஃப் பங்களிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், கையில் உள்ள சம்பளத்தை குறைக்கலாம்.

நான்கு தொழிலாளர் விதிமுறைகளையும் மத்திய அரசு விரைவில் செயல்படுத்த போகிறது இதனால் நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். இதுவரை கிடைத்த தகவல்களின்படி, நான்கு தொழிலாளர் விதிமுறைகளும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த முடிவு  அக்டோபர் 1 க்குள்எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அரசு செயல்படுத்தவிருக்கும் விதிகளை அமல்படுத்திய பிறகு, கையில் கிடைக்கும்சம்பளம் குறைவாகவும் வருங்கால வைப்பு நிதியின் அதிகமாகவும் கிடைக்கும்.

இந்தக் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், அடிப்படை ஊதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதியைக் கணக்கிடும் முறை மாறும். அமைச்சகம் நான்கு விதிமுறைகளின் கீழ் விதிகளை நிர்ணயித்துள்ளது. ஆனால் தொழிலாளர் விதிமுறைகள் ஒரே நேரத்தில் மாற்ற முயற்சிப்பதால் செயல்படுத்த முடியவில்லை.

இந்த விதி அமல்படுத்தப்பட்டால், புதிய தொழிலாளர் சட்டம் அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை செய்ய முன்மொழியப்பட்டதால் அலுவலக நேரமும் அதிகரிக்கும். OSH குறியீட்டின் முன்மொழியப்பட்ட விதிகளின்படி, கூடுதல் வேலையை 15 முதல் 30 நிமிடங்கள் வரை எண்ணி அதை மேலதிக நேரத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இப்போதைக்கு, 30 நிமிடங்களுக்கும் குறைவான வேலை கூடுதல் நேரமாக கணக்கிடப்படவில்லை. இந்த முன்மொழியப்பட்ட விதிகளில்தான் எந்த ஊழியரும் 5 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது. ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் அரை மணிநேர ஓய்வு கட்டாயமாகும்.

சம்பளம் எப்படி பாதிக்கப்படும்?

புதிய முன்மொழியப்பட்ட விதிகளின்படி, அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், சம்பளத்தின் முழு அமைப்பும் மாறும். இதுவரை சம்பளத்தில் கொடுப்பனவுகளின் பங்கு அதிகமாக இருந்தது. அடிப்படை ஊதியத்தை அதிகரித்த பிறகு, பிஎஃப் அதிகரிக்கும். இதன் பிறகு கையில் கிடைக்கு சம்பளம் குறைக்கப்படும். இருப்பினும், ஓய்வூதிய நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஓய்வூதிய தொகை அதிகரிக்கும்

சம்பள அமைப்பு அதிகரித்த பிறகு பென்ஷன் மற்றும் பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும். பிஎஃப் அதிகரிக்கும் போது, ​​நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் பிஎஃப் -க்கு அதிக பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ஓய்வுக்குப் பிறகு மக்கள் பெற்று கொள்ளும் தொகையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...

தொழிலாளர் பற்றாக்குறை எதிரொலி- தென்னங்கன்று நடவு அதிகரிப்பு!

English Summary: Will working hours change from October 1? New labor law comes into force!

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.