வேளாண் இயந்திரங்களுக்கான மானிய நிலவரம்
விவசாயத்திற்கு தேவையான கருவிகளை வாங்க வேளாண் பொறியியல் துறை (Agriculture Engineering Department) மூலம், விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
உணவு தேவைக்காகவும் விளைச்சலை பெருக்குவதற்காகவும் வேளாண் பொறியியல் துறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், டிராக்டர், பவர் டில்லர், கதிரடிக்கும் கருவி, மோட்டார் பம்ப் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை வாங்க மானிய (Subsidy) உதவிகள் வழங்கப்படுகிறது. ஆதிதிரவிடர், பழங்குடியினர், சிறு,குறு விவசாயிகள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் விவசாயிகளுக்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.
பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு அரசால் வழங்கப்படும் அதிகபட்ச மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் கருவிகளுக்கான மானிய நிலவரம்
வேளாண் கருவிகளுக்கான மானிய நிலவரம்
வேளாண் கருவிகளுக்கான மானிய நிலவரம்
வேளாண் கருவிகளுக்கான மானிய நிலவரம்
வேளாண் கருவிகளுக்கான மானிய நிலவரம்
அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் பயனை கிடைக்க செய்யும் வகையில், வேளாண் இயந்திரங்களைக் கொண்டு வாடைகை மையம் அமைக்கவும் அரசு மானிய உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.