1. விவசாய தகவல்கள்

கரும்பு விவசாயியா நீங்கள்? உடனே கூடுதல் மானியம் பெற விண்ணப்பியுங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Are you a sugarcane farmer? Apply for an additional grant immediately!

கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, கூடுதல் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

தித்திக்கும் கரும்பு (Thorny cane)

கரும்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அதன் சுவைதான். பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம்தான் இந்தக் கருப்புநிறக் கரும்பின் சுவையை நாம் ருசிக்க முடியும். இந்த முறை தவறவிட்டால், அடுத்த 24 மாதங்கள் காத்திருந்தே ஆக வேண்டும்.

இருப்பினும் பச்சை நிறக் கரும்புகள் வருடம்முழுவதும் விற்கனை செய்யப்பட்டாலும், அதனை வாயால் கடித்து சாப்பிடுவது என்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக கரும்பு நிறக் கரும்பு அனைவராலும் விரும்பப்படுகிறது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கரும்புக்கு (For Sugarcane)

கோவையில் 350 ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. எனவே கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

100% மானியம் (100% subsidy)

சொட்டுநீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்பட உள்ளது.

கூடுதல் மானியம் (Additional grant)

கரும்பு, பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டுநீர் பாசனக் கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.

கூடுதல் மானியமாக ரூ.38 ஆயிரமும், தரையின் கீழ் அமைக்கும் போது ரூ.49 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

ரூ.1.13 லட்சம் (Rs.1.13 lakhs)

கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணற்றின் மூலம் மேற்பரப்பு சொட்டுநீர் பாசனக் கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.

கூடுதல் மானியமாக ரூ.24 ஆயிரமும், தரையின் கீழ் அமைக்கும்போது, ரூ.36 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • சிட்டா

  • அடங்கல்

  • குடும்ப அட்டை நகல்

  • நில வரைபடம்

  • மூன்று புகைப்படங்கள்

முன்பதிவு அவசியம் (Booking is required)

சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் மேலே கூறிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!

English Summary: Are you a sugarcane farmer? Apply for an additional grant immediately! Published on: 24 July 2021, 10:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.