1. விவசாய தகவல்கள்

e-NAAM: மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி!

R. Balakrishnan
R. Balakrishnan

Electronic procurement of coconut

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல் நடந்தது. இதனால், இனி விவசாயிகளுக்கு மிக எளிதான முறையில் தேங்காய்களை விற்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

தேங்காய் கொள்முதல்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இ-நாம் (e-NAAM)

இந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் பகுதி விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 300 தேங்காய்கள் கொள்முதல் நடைபெற்றது. செலவுகள் தவிா்ப்பு இதில் தேங்காய் ஒரு குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 300க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 100-க்கும் கொள்முதல் நடந்தது. விவசாயிகளின் இடத்துக்கே சென்று பரிவர்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்றுகூலி, இறக்குகூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கபடுகிறது.

மேலும் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடியாக பணமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் படிக்க

Post Office: ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள்!

இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!

English Summary: e-NAAM: Electronic procurement of coconut: Farmers rejoice!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.