1. விவசாய தகவல்கள்

இ-ஷ்ரம் போர்டல் சமீபத்திய அப்டேட் : யாரெல்லாம் பதிவு செய்ய முடியும்! முழு விவரம்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
E-Shram Portal Latest Update: Anyone can register! Full details!

நாட்டில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த 38 கோடி தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இந்த இ-ஷ்ரம் (E Shram) போர்டல் மூலம் அரசாங்கம் தேசிய தரவுத்தளத்தை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் கீழ், 12 இலக்க பிரத்யேக எண்ணைக் கொண்ட இ-ஷ்ரம் (E Shram) கார்டுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், மேலும் இந்த இ- ஷ்ரம் (E Shram) கார்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும்.

இ- ஷ்ராம் (E Shram) கார்டுக்கான பதிவு செய்யும் செயல்முறையைச் சரிபார்க்கவும்

பதிவு செய்ய உதவும் இலவச எண்:

தொழிலாளர்களுக்கு உதவ தேசிய கட்டணமில்லா எண் 14434 தொடங்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்திர யாதவ் இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலின் லோகோவை வெளியிட்டார்.

யார் பதிவு செய்ய தகுதியானவர்?

16 முதல் 59 வயது வரை உள்ள அமைப்புசாரா துறையில் பணிபுரியும் எந்த ஒரு தொழிலாளியும் இந்த இ-ஷ்ரம் (E Shram) கார்டுக்கு பதிவு செய்யலாம். இருப்பினும், போர்ட்டலில், நீங்கள் EPFO அல்லது ESIC இன் உறுப்பினரா என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். நீங்கள் EPFO அல்லது ESIC இல் உறுப்பினராக இருந்தால் இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலில் உங்களால் பதிவு செய்ய முடியாது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மற்றும் EPFO அல்லது ESIC இன் பலன்களைப் பெற முடியாதவர்களுக்காக மட்டுமே இது தொடங்கப்பட்டுள்ளது.

இ- ஷ்ரம் (E- Shram) கார்டுக்கு யார் விண்ணப்பிக்கலாம் என்ற முழுமையான பட்டியல்

  • விவசாயத் தொழிலாளர்கள்
  • பால் விவசாயி
  • காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
  • செங்கல் சூளை தொழிலாளி
  • மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள்
  • லேபிளிங் மற்றும் பேக்கிங்
  • தச்சர், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலாளி
  • உப்பு தொழிலாளி
  • கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள்
  • வீட்டு வேலையாட்கள்
  • முடி திருத்துபவர்
  • செய்தித்தாள் விற்பனையாளர்கள்
  • ரிக்ஷா ஓட்டுனர்
  • ஆட்டோ டிரைவர்
  • பட்டு உற்பத்தி தொழிலாளி
  • வீட்டு வேலைக்காரி
  • தெரு வியாபாரிகள்
  • MGNREGA தொழிலாளர்கள்

இந்த இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி குறித்து மத்திய அரசு அல்லது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் வெளியிடப்படவில்லை. எனவே, தொழிலாளர்கள் தங்கள் இ-ஷ்ரம் (E Shram) அட்டையை எந்தத் தொந்தரவும் இல்லாமல் இப்போது பெறலாம்.

எந்தவொரு தொழிலாளியும் இந்த பதிவு போர்ட்டலைப் பார்வையிட்டு பதிவு செய்யலாம். இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலில் பதிவு செய்வது முற்றிலும் இலவசம். இதற்கு சிஎஸ்சி மையங்களில் தொழிலாளர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க:

PM Kisan Tractor Yojana : டிராக்டர் வாங்குவதற்கு அரசு 50% மானியம்! விரைவில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

English Summary: E-Shram Portal Latest Update: Anyone can register! Full details! Published on: 30 October 2021, 02:08 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.