1. விவசாய தகவல்கள்

கொட்டித் தீர்க்கப் போகிறது மிக கனமழை -வானிலை மையம் எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Heavy rain is about to settle - Weather Center Warning!
Credit : Skymet Weather

இலங்கை மற்றும் குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Upper Air Circulation) காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் இராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயிர்கள் நாசம் (Destruction of crops)

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கனமழை (Heavy rain)

அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல்,  தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மிதமானமழை பெய்யக்கூடும்.

வானிலை முன்னெச்சரிக்கை (Weather Forecast)

13.01.21

இராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச மழைபதிவு (Maximum rainfall)

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

  • இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாப்பகுதி, கேரளக்  கடலோரப்பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • இதேபோல் 13ம் தேதி குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில், பலத்த சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!

மத்திய பட்ஜெட்டில் PM-Kisan தவணைத்தொகை அதிகரிக்கிறது- மோடி அரசு பரிசீலனை!

English Summary: Heavy rain is about to settle - Weather Center Warning! Published on: 12 January 2021, 02:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.