1. விவசாய தகவல்கள்

அதி கனமழை காலம்- செய்யக்கூடாதவை எவை?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Heavy rain warning - what not to do?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் 12-ம்தேதி வரை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் நவம்பர் 12-ம்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்கூட்டியே மக்கள் கீழ்காணும் அத்தியாவசிய பொருள்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

  • கேஸ் சிலிண்டர்

  • மண்ணெண்ணெய்

  • மெழுகுவர்த்தி

  • கொசுவர்த்தி

  • ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி,

  • மளிகைப் பொருள்கள்,

  • மாத்திரைகள்,

  • குழந்தைகளுக்கு தேவையான பால் பவுட்டர்,

  • நாப்கின்கள்

  • அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்கள்

  • பேட்டரி டார்ச்

  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

  • முதலுதவி சாதனங்கள்

என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது?

  • செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.

  • இடி மின்னல் சமயத்தில் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம்.

  • இடி மின்னல் சமயத்தில் மரங்களுக்கு அருகில் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்.

  • மழை பொழியும் சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே அல்லது வெளியூர் செல்வதைத் தவிக்கவும்.

  • தாழ்வானப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்.

  • அரசு அலுவலர்கள் உங்களை வந்து அழைக்கும் பொழுது ஒத்துழைப்பு கொடுத்து அரசு நிவாரண மையங்களுக்குச் செல்வது பாதுகாப்பானது.

  • குழந்தைகளைத் தேவையின்றி வெளியே அனுப்ப வேண்டாம்.

  • தங்கள் பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் விளையாட வேண்டாம்.

  • மழை நேரங்களில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீரைத் தேவையான அளவு பிடித்து வைத்துக் கொள்ளவும்.

  • எப்பொழுதும் டேங்கில் தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

  • வீடுகளுக்கு அருகில் மரங்கள் இருந்தால் அதற்கு அருகில் அமர்வதைக் கட்டாயம் தவிர்க்கவும்.

  • மழை பெய்யும் நேரத்தில், மின் கம்பிகள் அறுந்துக் கிடக்க வாய்ப்பு உள்ளதால், சாலைகளில் கவனமாக நடந்து செல்லவும்.

  • வீட்டுச் சுவர்களில் நீர் கசிந்து மின்சாதனங்களில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளதால் மின்சாதனங்களை கவனத்துடன் பயன்படுத்தவும்.

  • சுவிட்ச் போடும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.

  • குழந்தைகளை சுவிட்ச் போட அனுமதிக்கக்கூடாது.

  • வானிலை நிலவரங்களை அடிக்கடி கவனியுங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப கவனத்துடன் செயல்படுவது மிக மிக அவசியமான ஒன்று.

  • வீண் வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை!

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!

English Summary: Heavy rain warning - what not to do? Published on: 11 November 2021, 07:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.