1. விவசாய தகவல்கள்

இன்னும் சில மணி நேரங்களில் உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.2000- மத்திய அரசு தகவல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தில் இன்னும் ஓரிரு தினங்களில், பயனாளிகளுக்கு அடுத்த கட்ட தொகை பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி,2 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை குறிப்பாக, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் எனத் தெரிகிறது.

ரூ.6,000

பொருளதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

செப்.15க்குள்

ஏற்கனவே 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டன. பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 12ஆவது தவணையை இன்னும் ஓரிரு தினங்களில், அதாவது, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடைபெற சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனைப் பெற சுமார் 11 கோடி விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மத்திய அரசு தகவல்

இந்த 12வது தவணை குறித்து, கடந்த வாரம், குஜராத் விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, 2 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு கட்டாயம்

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட உள்ளது.
இதன்படி, ஆதார் எண் சமர்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இது எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க

எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி, தங்கள் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அதேநேரத்தில், பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து அறிந்து கொள்ள கட்டணமில்லா 155261 / 011-24300606 இந்தத் தொலைப்பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: PM Kisan: Rs.2000 in your bank account in a few hours! Published on: 13 September 2022, 08:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.