1. விவசாய தகவல்கள்

PMKSY:சொட்டுநீர் பாசனப் பள்ளம் அமைக்க ரூ.6ஆயிரம் வரை மானியம்- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Subsidy up to Rs.6000 for Dip irrigation
Credit:Amazon.in

சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டுவதற்கு ரூ.6ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (Prime Minister Krishi Sinchayee Yojana PMKSY)மூலம் இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரித்திருப்பதாவது:

  • வெள்ளிமலை ஒன்றியத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, வெங்காயம் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் அரசு வழங்குகிறது.

  • இதில், விவசாயிகளுக்கு கூடுதலாக குழாய்களை அமைக்க பள்ளம் எடுப்பதற்கு அதிகளவில் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது.

  • இதனையொட்டி குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் பள்ளம் எடுப்பதற்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.3,000 வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டர் அளவிற்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது.

  • எனவே, சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் பதிவின் போது தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

  • தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தென்னை சாகுபடியில் கூடுதல் வருமானம் வேண்டுமா? ஊடுபயிராகத் திப்பிலியைப் பயிரிடுங்கள்!

பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?

English Summary: PMKSY: Subsidy up to Rs.6000 for Drip irrigation Published on: 31 August 2020, 09:16 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.