1. விவசாய தகவல்கள்

விவசாயிகளுக்கு உதவும் சோலார் உலர்த்தி: தேனி விவசாயிகள் ஆர்வம்!

R. Balakrishnan
R. Balakrishnan

Solar dryer

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நபர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் போவதால் அவ்வப்போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தேவைக்கு அதிகமாக விளைபொருட்கள் உற்பத்தியாகும் பொழுது அதனை வீணடிக்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிகள் தற்போது கற்றுள்ளனர்.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்

விளைவித்த பொருள் வீணாகாமல் தடுப்பதற்கு வாழைக்காய், கொய்யா காய், உலர்திரட்சை, வெற்றிலை, மாங்காய், ஏலக்காய், இஞ்சி, தக்காளி என பல பொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சோலார் உலர்த்தி (Solar Dryer)

விளைபொருளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பொழுது பொருள்களை நன்றாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த தேவையை சோலார் உலர்த்தி பூர்த்தி செய்து வருகிறது. சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது விரைவாகவும், சுகாதாரமான முறையிலும், உரிய நேரத்திலும் பொருட்களை காய வைக்க முடியும் என்பதால் சோலார் உலர்த்தியின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சிறிய அளவிலான சோலார் உலர்த்தியிலிருந்து பெரிய அளவிலான சோலார் உலர்த்தி வரை சந்தையில் உள்ளன. விவசாயிகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்றார் போல் சோலார் உலர்த்தியை வாங்கி கொள்கின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் அதிகம் சோலார் உலர்த்தியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதற்காக தனியாக சோலார் உலர்த்தி தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கம்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமார்.

சுகுமார் கூறுகையில், சோலார் உலர்த்தியை இதுவரை பல விவசாயிகளுக்கு செய்து கொடுத்துள்ளேன். விவசாயிகளின் தேவைக்கு ஏற்றார் போல் சோலார் உலர்த்தியை தயார் செய்யலாம். சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது காற்றில் பரவும் தூசியில் இருந்து பாதுகாப்பாகவும், திடீரென மழை வந்தால் மழையிலிருந்து பாதுகாக்கவும், விரைவான நேரத்தில் பொருட்களை காய வைக்கவும் உதவுகிறது. சோலார் உலர்த்தி மூலம் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகள் குறைக்கப்படுவதோடு, வேலை ஆட்கள் குறைவு மற்றும் காலநிலை சேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளது.

மேலும் படிக்க

7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு திட்டம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

நம்ம ஊரு பூண்டுக்கு இவ்வளவு மவுசா: சீனாவை பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் முதலிடம்!

English Summary: Solar dryer helps farmers: Theni farmers are interested!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.