1. விவசாய தகவல்கள்

24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்: தமிழக அமைச்சர் முக்கிய தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan

Three Phase Electricity

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தற்போது 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் இரண்டு ( குரூப் 1, குரூப் 2) பிரிவுகள் பிரிக்கப்பட்டு அங்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்டா பகுதிகளில் குரூப் 1 குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 6 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500: மாநில அரசின் அருமையான திட்டம்!

English Summary: Three-phase electricity for farmers 24 hours a day: Tamil Nadu Minister important information!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.