பிஎம் கிசான்- நில ஆவணங்களை இணைக்காத விவசாயிகளின் கவனத்திற்கு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM kisan scheme

பிஎம் கிசான் திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமலும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நில ஆவணங்களை இணைக்காமலும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு- பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 81,987 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 15 தவணைகளாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.கிசான் திட்ட வழிகாட்டுதலின்படி பயனாளிகள் தொடர்ந்து தங்கள் தவணைத் தொகை பெற்றிட இ.கே.ஒய்.சி பதிவேற்றம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 7,885 பயனாளிகள் இத்திட்டத்தில் இ.கே.ஒய்.சி பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளனர். எனவே, தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம் அல்லது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டும் இ.கே.ஒய்.சி செய்யலாம்.

பி.எம்.கிசான் சிறப்பு முகாம்:

மேலும், பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தகுதி உள்ள விவசாயிகளை இணைத்திட கிராம அளவிலான அலுவலர்கள் (Village Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான முகாம் 15.01.2024 வரை அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை அணுகி இதுவரை பதிவு செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் பதிவு செய்திடவும் மற்றும் பி.எம்.கிசான் முக செயலி மூலம் விவசாயி கண்சிமிட்டல் மூலம் எளிமையாக இ.கே.ஒய்.சி பணியினை செய்து முடிக்க கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் பி.எம்.கிசான் திட்ட அடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து விவசாயிகள் பெற இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில ஆவணங்களை சமர்பிக்காத விவசாயிகள்:

இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,127 விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். இத்திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை 17,731 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர்.

Read more: கைக்கொடுத்த வெள்ளை முஸ்லி மூலிகை- ஆண்டுக்கு 25 கோடி வருமானம்!

இப்பணிகளை முடித்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதி தொடர்ந்து விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், இ.., தெரிவித்துள்ளார்.

Read more: Vi SmartAgri திட்டம்- விவசாய பணிகளில் உள்ளீடு செலவு 23% வரை குறைவு

English Summary: good news for farmers who do not attach land document in PM kisan scheme Published on: 28 December 2023, 06:02 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.