விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்- உங்களுக்கு வந்துச்சா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
pm kisan 15 installment

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சமூக போராளி பிா்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவொன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி விவசாயிகள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருந்த PM-kisan 15 வது தவணையினை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்தார்.

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 8 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணையினை ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைப்பெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்தார்.

இந்நிலையில் 15-வது தவணையினை நவம்பர் மாத கடைசி வாரத்தில் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்த நிலையில் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு முன்னரே அதாவது இன்று ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் பணத்தினை வரவு வைத்தார் பிரதமர் மோடி.

பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:

  • PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் ( https://pmkisan.gov.in/ )
  • வலதுபுறத்தில் உள்ள 'பயனாளிகள் பட்டியல்' (Beneficiary List) என்பதைக் கிளிக் செய்யவும்
  • அதன்பின் தோன்றும் பக்கத்தில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் என்கிற கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
  • இதன்பின் 'Get Report' டேப்பினை கிளிக் செய்யவும்
  • 15-வது தவணை பெற்றுள்ள பயனாளிகளின் பட்டியல் விவரம் அப்பக்கத்தில் வரும். அவற்றில் உங்களது பெயரை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் பின்வரும் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்- 155261/011-24300606. நீங்கள் மெயில் மூலமாகவும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். (pmkisan-ict@gov.in)

PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் காண்க:

தமிழக கால்நடை விவசாயி- பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- டெல்டா பகுதியை நெருங்கும் கனமழை

English Summary: very good news for farmers 2000 rupees deposit in bank account Published on: 15 November 2023, 02:46 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.