1. வாழ்வும் நலமும்

நான்கு முக்கிய பானங்கள்! அனைவரும் அவசியம் தினசரி உட்கொள்ள வேண்டும்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Four main drinks! Everyone must necessarily consume daily!

பரபரப்பான வாழ்க்கையின் காரணமாக, ஒருவர் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நாம் எரிச்சலையும், ஆற்றல் இல்லாமையையும் (மன அழுத்தம் மற்றும் பதட்டம்) உணர்கிறோம்.

நீங்களும் இந்த வகையான பிரச்சனையை எதிர்கொண்டால், நீரேற்றமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க சில ஆரோக்கியமான பானங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஆரோக்கியமான பானங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும். எந்தெந்த பானங்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஆற்றலுடன் இருக்க 4 பானங்கள்

அதிகாலையில் ஸ்மூத்தி (Smoothy) 

இரவு நல்ல தூக்கத்திற்குப் பிறகு, உங்கள் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழி ஒரு ஆரோக்கியமான ஸ்மூத்தியை உட்கொள்வதாகும். பச்சை காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தியை சர்க்கரை குறைவாக உள்ளது. இதில் அதிக நார்ச்சத்து உள்ளது.

இதனால் புத்துணர்ச்சி ஏற்படும். இதைச் செய்ய, உங்களுக்கு சிறுது வெண்ணெய், 2 அன்னாசி துண்டுகள், 10-12 கீரைகள், 1 வாழைப்பழம் மற்றும் அரை கப் தேங்காய் நீர் தேவைப்படும். வல்லுனர்களின் கூற்றுப்படி, கீரைகளில் ஆற்றலை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரும்புச் சத்து நிறைந்தது, இது சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

காலை உணவு - காபி

ஆய்வின் படி, காபி குடிப்பது உணவு உண்ணும் விருப்பத்தை குறைக்கிறது என்று நம்பப்படுகிறது. இது ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. ஒரு ஆய்வின்படி, இது ஆற்றலை மட்டுமல்ல, பொறுமையின் அளவையும் அதிகரிக்கிறது.

மதிய உணவுக்கு முன் தேங்காய் நீர்

பசியை போக்க மதிய உணவுக்கு முன் தேங்காய் தண்ணீர் குடிக்கலாம். இதில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இது பொட்டாசியம் நிறைந்த மூலமாகும், இது உடலில் உள்ள திரவ அளவை சமநிலைப்படுத்தி நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

இரவு உணவிற்குப் பிறகு - கோல்டன் பால்

இரவு உணவிற்கு பிறகு நீங்கள் மஞ்சள் பாலை உட்கொள்ளலாம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த பானத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை மன அழுத்தத்தைக் குறைக்கவும் நன்றாக தூங்கவும் உதவுகின்றன.

இந்த பானங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும். உடலையும் சருமத்தையும் நீரேற்றமாக வைத்திருக்க தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு மற்றும் அமைதியின்மையை சமாளிக்கவும் இது உதவுகிறது.

கண்டிப்பாக தொடர்ந்து இதுபோன்ற பானங்களை முயற்சி செய்ய வேண்டும்.இதற்கு பழக்கமாகிவிட்டால் நீங்கள் நிறுத்த விரும்பினாலும் தானாக குடிக்க முற்படுவீர்கள்.

மேலும் படிக்க:

காபியில் வெண்ணெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

English Summary: Four main drinks! Everyone must necessarily consume daily! Published on: 25 October 2021, 11:44 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.