1. தோட்டக்கலை

நுண்ணீர் பாசனத்திற்கு 100% மானியம்- விண்ணப்பிக்கலாம் வாங்க!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
100% Subsidy for Micro Irrigation- Apply and Buy!

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கருவிகள் அமைக்க (கருவிகள் அமைக்க)

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து லாபம் பெறும் வகையில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் கருவிகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.1,13,133 மானியம் (ரூ.1,13,133 மானியம்

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அதிகபட்சமாக சொட்டு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.1,13,133 மானியமும், தெளிப்பு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.36,176 மானியமும் வழங்கப்படுகிறது.

ரூ.87,880 மானியம் (ரூ.87,880 மானியம்)

இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில், சொட்டு நீருக்கு அதிகபட்சமாக 1 ஹெக்டருக்கு ரூ.87,880, தெளிப்பு நீருக்கு ரூ.28,101 மானியமாக அளிக்கப்படுகிறது.

தேவைப்படும் ஆணவங்கள் (Arrogance required)

  • இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்ய வேண்டும்.

  • பிறகு, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்காக வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

  • இதைத்தொடர்ந்து தேவைப்படும் ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும்.

பயனாளிகள் (Beneficiaries)

இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், காய்கறி பயிர்கள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம்.

எளிதில் பயன்பெறலாம் (Easy to use)

மேலும், இத்திட்டத்தின்மூலம் நீர் சிக்கனம், உரம் சிக்கனம், கூலி ஆட்கள் குறைவு, சுலபமான களை மேலாண்மை, அதிகப்படியான மகசூல், வருவாய், தரமான விளை பொருட்கள் ஆகிய பயன்களை கொண்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலமாக எளிதாக பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாமக்கல்

இதேபோல் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் வட்டாரத்தில், தோட்டக்கலை துறை மூலம், நுண்ணீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட, 457 ஹெக்டேருக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

100 % மானியம் (100% subsidy)

இதன்படி, சிறு குறு விவசாயிகளுக்கு, ஐந்து ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட, 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம். தேவையான ஆவணங்களுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தகவல்

சின்னதுரை

தோட்டக்கலை உதவி இயக்குனர்

மேலும் படிக்க...

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்

English Summary: 100% Subsidy for Micro Irrigation- Apply and Buy! Published on: 04 July 2021, 09:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.