1. தோட்டக்கலை

நெல் வரப்புகளில் உளுந்து பயிரிட்டால், 50% மானியம்- விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
50% subsidy for paddy cultivation in paddy fields - Details inside!
Credit : Facebook

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் கூறுகையில்,

  • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சாா்பில், பயறு வகை பயிா் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நெல் வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

  • 120 நாள்கள் அறுவடை பருவமுள்ள நெல் வயல் வரப்புகளில், அதே பருவத்தில் 70 நாள்களில் அறுவடையாகும் உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

  • மேலும், வயல் வரப்பில் உள்ள உளுந்து பயிா் நெல் பயிரில் தீமை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க உதவுகிறது.

  • அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிா்களை வயலில் தளை உரமாகவும் பயன்படுத்தலாம்.

  • வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், அரசு மானியம் பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா்.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!

PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!

English Summary: 50% subsidy for paddy cultivation in paddy fields - Details inside! Published on: 24 November 2020, 12:31 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.