1. தோட்டக்கலை

தோட்டக்கலை பயிர்கள் மூலம் இரட்டிப்பு லாபம்: வயலில் 20% இயற்கை விவசாயம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Doubling the profit by horticultural crops: 20% natural agriculture in the field

தோட்டக்கலைத் துறையில் விவசாயிகள் தன்னிறைவை நோக்கி நகர்கின்றனர். கோட்ட அளவிலான பயிற்சி மையங்கள் உருவாகும்போது, புதிய தொழில் நுட்பங்களில் பயிற்சி எடுத்து விவசாயிகள் தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்கள். இதனை மத்தியப் பிரதேசத்தின் தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பாரத் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். ஹோஷாங்காபாத்தில் ரூ.98 லட்சத்தில் கட்டப்படவுள்ள தோட்டக்கலை விவசாயிகள் பயிற்சி மையத்தின் பூமி-பூஜை நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (02-01-2022) நடைபெற்றது. அப்போது அவர், ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹோஷங்காபாத் தொகுதி தோட்டக்கலைக்காக சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

குறுவை மற்றும் சாம்ப பயிர்களுடன் சேர்த்து, தோட்டக்கலைக்கும் நிலத்தின் பரப்பளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குஷ்வாஹா கூறினார். மேலும் அவர், காய்கறி, பழங்கள் மற்றும் மசாலாப் பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு உணவு பதப்படுத்தலுக்கும் மானியம் வழங்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார். விவசாயிகள் தோட்டக்கலை (தோட்டக்கலை பயிர்கள்) நோக்கி சென்றால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என அறிவுறுத்தினார். ஒன்று, குறைந்த உரம் பயன்படுத்தப்படும் மற்றும் பழங்களும் பயனடையும். எனவே, பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

கொய்யா ஹோஷாங்காபாத் மாவட்டத்தின் ஒரு தயாரிப்பு ஆகும் (Guava is a product of Hoshangabad district)

உலகச் சந்தை இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பதாக அமைச்சர் கூறினார். நாடு மற்றும் மாநிலத்திலிருந்து இயற்கை விவசாயம் மற்றும் பழங்கள் உற்பத்திக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், 'ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு' என்பதன் கீழ் தயாரிப்புகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, கொய்யா ஹோஷாங்காபாத் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் குஷ்வாஹா உணவு பதப்படுத்துதலுக்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

20% வயலில் இயற்கை விவசாயம் செய்ய கொரிக்கை (20% demand for organic farming in the field)

விவசாயிகள் தங்களது நிலப்பரப்பில் 20 சதவீதத்தை இயற்கை விவசாயமாக பயன்படுத்த முன்வர வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரின் எண்ணம் என்று குஷ்வாஹா குறிப்பிட்டார். அவர் அதிகாரிகளிடம், தோட்டக்கலைத்துறையின் சில இடங்களில் ஆக்கிரமிப்பு புகார்கள் வந்துள்ளன. ஒரு வாரத்தில் எல்லை நிர்ணயம் செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறினார்.

பாரம்பரிய பயிர்களை விட அதிக வருவாய் கிடைக்கும் (Higher yields than conventional crops)

நெல் மற்றும் கோதுமை போன்ற பாரம்பரிய பயிர்களை விட தோட்டக்கலை பயிர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவும். எனவே அரசு, விவசாயிகளை, இதில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், குஷ்வாஹா திட்டத்தில் பல விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக மேற்கோள்களையும் கருவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குஷால் படேல், எம்எல்ஏ டாக்டர் சீதாசரண் சர்மா, சியோனி மால்வா எம்எல்ஏ பிரேம்சங்கர் வர்மா, சோஹாக்பூர் எம்எல்ஏ விஜய்பால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க:

தித்திக்கும் வெல்லம் - பொங்கலுக்குத் தயாரிக்கும் பணி தீவிரம்!

கரும்பு விளைச்சலை அதிகரிக்க தேவை சிலிக்கான், முழு விவரம் இதோ!

English Summary: Doubling the profit by horticultural crops: 20% natural agriculture in the field Published on: 03 January 2022, 12:35 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.