1. செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1,000

T. Vigneshwaran
T. Vigneshwaran
Ration Shop

கனமழை காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததையடுத்து, நாளை முதல் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக அப்போது சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44செ.மீ அளவிற்கு மழை பெய்தது.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்க உத்தரவிட்டிருந்தார்

இதையடுத்து, நாளை முதல் நியாய விலைகடைகளில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

ரூ.35,000 பென்ஷன்: திட்டம் பற்றி தெரியுமா?

கல்வி உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

English Summary: 1,000 for ration card holders from tomorrow Published on: 23 November 2022, 07:30 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.