1. செய்திகள்

விவசாயிகளிடம் சொட்டு நீர்பாசன முறையை ஊக்கப்படுத்த 100% மானியம்!

KJ Staff
KJ Staff
Drip irrigation system
Credit : ஜனநேசன்

விவசாயம் செய்வதற்கு இன்றியமையாத மூல ஆதாரங்களில் தண்ணீரும் ஒன்று. எல்லா இடத்திலும் தண்ணீர்ப் பிரச்சனை நிலவும் நிலையில், விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. தண்ணீரை மிச்சப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது தான், சொட்டு நீர்ப்பாசனம் (Drip irrigation). இப்பாசன முறையில், தண்ணீரை அதிக அளவில் சேமிக்கலாம். சில விவசாயிகள் இப்பாசன முறையை கடைபிடித்தாலும், அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காகத் தான், விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சொட்டுநீர்ப் பாசன முறைக்கு 100% மானியம் (Subsidy) வழங்க முன்வந்துள்ளது தோட்டக்கலைத் துறை.

100% மானியம்:

தோட்டக்கலைத்துறை (Department of Horticulture) உதவி இயக்குனர் சாகுல் அமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்தில் சொட்டு நீர்ப் பாசன முறையை ஊக்கப்படுத்தும் (Encourage) வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் (Subsidy) வழங்கப்பட உள்ளது. அதன்படி திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதியில் நன்செய் 2.5 ஏக்கர், புன்செய் 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசன குழாய்களை அமைத்து 100 சதவீதம் வரை மானிய உதவி பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மானியம் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது நிலத்தின் கணினி பட்டா, குறு விவசாயி சான்றிதழ் (Minor Farmer Certificate), வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை (Aadhar Card) உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கஜா புயலின் 2-ம் ஆண்டு! 1000 பனை விதைகளை விதைப்பு!

உருளை கிழங்கில் நோய் தாக்குதல்! கவலையில் நீலகிரி விவசாயிகள்!

English Summary: 100% subsidy to encourage drip irrigation system to farmers! Published on: 18 November 2020, 06:30 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.