1. செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Poonguzhali R
Poonguzhali R
3 days of rain in Tamil Nadu! Meteorological Center Information!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மார்ச் 25-ஆம் தேதி சனிக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 25 முதல் 28 வரை மாநிலத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும் 30-40 கிமீ வேகத்தில் அதிவேக காற்று மார்ச் 25 அன்று மழையுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்ட போதிலும், மார்ச் 29 புதன்கிழமை வரை கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. மார்ச் 25 ஆம் தேதி இரவு 11:30 மணி வரை தமிழகக் கரையோரங்களில் கடல் சீற்றமாக இருக்கும். கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் கடற்பகுதிகளிலும் இதே நிலைதான் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான முதல் கனமழை பெய்தது, நகரின் சில பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. அறிக்கையின்படி, முகலிவாக்கம் மற்றும் பெருங்குடியில் 6 செ.மீ மழையும், ஆலந்தூர் மற்றும் மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழையும், கோடம்பாக்கம் மற்றும் தரமணியில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், நந்தனம் (1 மிமீ), எம்ஆர்சி நகர் (6 மிமீ), மற்றும் வில்லிவாக்கம் (12 மிமீ) உள்ளிட்ட நகரின் பிற பகுதிகளிலும் லேசான மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க

பன்றிக்காய்ச்சல் அச்சம்! நாமக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்ட 20 பன்றிகள்!!

TNPL ஆக்கிரமிப்பு மரங்களை வேரோடு அழிக்க திட்டம்!

English Summary: 3 days of rain in Tamil Nadu! Meteorological Center Information!! Published on: 25 March 2023, 05:50 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub