1. செய்திகள்

2 நாட்களுக்கு 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
4500 special buses will be operated for 2 days - Government of Tamil Nadu!
Credit: DTNext

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக மொத்தம் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பாதிப்பு அதிகரிக்கும் மாநிலம் (State of increasing vulnerability)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாகத் தமிழகம் தற்போது உள்ளது.

24ம் தேதியுடன் முடிகிறது (Ends with the 24th)

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு (Full curfew without relaxations)

இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தமிழகத்தில் 24-ம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு அனுமதி (Permission for private and government buses)

இதையொட்டி இரண்டு நாட்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4,500 சிறப்பு பேருந்துகள் (4,500 special buses)

தமிழகத்தில் மொத்தம் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகளும் திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

கூடுதல் பேருந்துகள் (Extra buses)

பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகள் (Chennai city buses)

மேலும் கோயம்பேடு மற்றும் தாம்பரத்திலிருந்து மக்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு வரும் பூஞ்சை தொற்று! பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி!!

English Summary: 4500 special buses will be operated for 2 days - Government of Tamil Nadu! Published on: 23 May 2021, 05:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.