1. செய்திகள்

ஆவின் பால் விநியோகம் பாதிப்பு| கோமாரி நோய் தடுப்பூசி முகாம்| M-sand BIS சான்றிதழ் அவசியம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
ஆவின் பால் விநியோகம் பாதிப்பு| கோமாரி நோய் தடுப்பூசி முகாம்| M-sand BIS சான்றிதழ் அவசியம்
Aavin milk supply affected|Measles Vaccination Camp| M-sand BIS certification is essential

கொள்முதல் விலை தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் வியாழக்கிழமை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) முதல் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும்.

தற்போது, ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்களை உற்பத்தி செய்யும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, உற்பத்தியாளர்களிடம் இருந்து, லிட்டருக்கு, 32க்கு பால் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 7 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் தற்போது ஆவின் பால் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டு, லிட்டருக்கு 42 முதல் 46 வரை கொடுக்கும் தனியார் பால் பண்ணைகளை நாடியுள்ளனர்.இந்நிலையில், இந்த வாரம் பால் விநியோகத்தில் கடும் இடையூறு ஏற்பட்டுள்ள மதுரை மண்டலத்தில் சனிக்கிழமை அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று சங்கம் அறிவித்துள்ளது. கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் மார்ச் 17 முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.

தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் - கோமாரி நோய் தடுப்பூசி திட்டம்

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் (NADCP) மூலம் 2023 மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 21 ம் தேதி முடிய 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் பசு மற்றும் எருமைகளுக்கு போடப்படவுள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 3 மாதத்திற்கு மேற்பட்ட அனைத்து கன்றுகளுக்கும் மார்ச் 31ம் தேதி முடிய தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கால்நடை மற்றும் மீன்வளத்தை மேம்படுத்தும் பல நலத்திட்டங்கள் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 189 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவிலான புதிய கட்டங்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் 47.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 61 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 11 கோடியே 66 இலட்சம் செலவில் கட்டுப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந. கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எம்-சாண்ட் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டது; BIS சான்றிதழ் அவசியம்

எம்-சாண்டின் தரத்தை மேம்படுத்த, BIS சான்றிதழைக் கட்டாயமாக்கி, ஒரு விரிவான கொள்கையை அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. நதி சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் மணல் உற்பத்தி அலகுகளின் ஒப்புதலுக்கான நடைமுறைகளை தரப்படுத்துவதும் இந்த கொள்கையின் நோக்கமாகும். ஆற்று மணலை விட எம்-சாண்ட் மலிவானது என்பதால் கிட்டத்தட்ட 80 சதவிதம் பில்டர்கள் பயன்படுத்துகின்றனர். விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் உரிமங்களை ரத்து செய்வதாக அரசு உறுதியளித்துள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, விதிகளை கடைபிடித்தல் மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றிற்கு இணங்க குவாரிகள் மற்றும் நசுக்கும் அலகுகளுக்கு நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கும் என்பது குறிப்பிடதக்கது.

மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துறை ஆலோசனை

திண்டுக்கல் மாவட்டத்தில் மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,700 எக்டர் பரப்பளவில் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த நோயை கட்டுப்படுத்த, வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சரியான இடைவெளியில் பயிர் செய்ய வேண்டும். நோயின் ஆரம்ப அறிகுறியின்போது, நனையும் கந்தகம் 0.25 சதவீதம் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். போஸ்டைஸ் அலுமினியம் 2.5 கிராம்/லிட்டர் அல்லது டினோகார்ப் 2.50 மில்லி/ லிட்டர் (அல்லது) பிப்ரோநில் 2 மில்லி / ஜிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தல் போன்ற, இந்நோயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் அடுத்த வாரம் பாதிப்பு! ஏன்?

விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் நேரம் அறிவிப்பு| ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு|

English Summary: Aavin milk supply affected|Measles Vaccination Camp| M-sand BIS certification is essential Published on: 10 March 2023, 03:28 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.