1. செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் குளு குளு சாரல் மழைக்கு வாய்ப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Shutterstock

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீமிசல் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 1 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

ஜூம் ஆப் செயலியில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • டிசம்பர் 20, 21 குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • டிசம்பர் 22, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

அரசுப் பள்ளியில் இயற்கை காய்கறித் தோட்டம்! அசத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்!

English Summary: Chennai Meteorological Department forecast Rain may occur in Tamilnadu for the next five days due to the northeast monsoon. Published on: 20 December 2020, 02:45 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.