1. செய்திகள்

அனைத்து ஊழியர்களுக்கும் ஜூலை 1 முதலே அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஜூலை ஒன்றாம் தேதி முதலே அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தார். கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

34% மாக உயர்வு

தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஜூலை 1 முதல்

இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்.

அரசாணை

இதற்கான அரசாணை விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 1ம் தேதி முதலே அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

English Summary: DA increase for all employees from July 1 Published on: 16 August 2022, 10:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.