1. செய்திகள்

மீண்டும் உயர்ந்தது முட்டை விலை: மேலும் உயர வாய்ப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan

Egg price raised

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை. ஒரே நாளில் 10 காசுகளும், 2 நாட்களில் 30 காசுகளும் விலை உயர்ந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து ஒரே நாளில் 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு (Egg Price Raised)

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 11ஆம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப் பட்டு 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது தமிழகத்தில் ஆடி மாதம் முடிவடையும் நிலையில் விற்பனை சற்று அதிகரித்து வருவதாகவும், அதேபோல தமிழகம், கேரளாவில் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இவ்விலை மேலும் உயரவே வாய்ப்புகள் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 45 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய் வரை இருக்கிறது.

மேலும் படிக்க

வாழை இலையில் வருமானம்: விவசாயிகளுக்கு நல்வாய்ப்பு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: இன்று குறைதீர்ப்பு முகாம்!

English Summary: Egg prices raised again: more likely to rise!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.