1. செய்திகள்

விவசாயிகளே சீக்கிரமா பயிர் காப்பீடு செய்யுங்கள்: இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!

R. Balakrishnan
R. Balakrishnan
Crop insurance

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டம், தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள்

நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். சம்பா நெல்பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.554.25 செலுத்த வேண்டும்.

காப்பீடுசெய்யும் முறை:

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்குபுத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுச் சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்ய கடைசி நாள்

வருகிற 15ஆம் தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

விவசாயிகளே கொஞ்சம் கவனியுங்கள்: நவம்பர் 1 இல் இதைச் செய்ய வேண்டும்!

சம்பா நெல் பயிர் காப்பீடு: விவசாயிகள் விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!

English Summary: Farmers: Hurry Crop Insurance: Few days left! Published on: 03 November 2022, 10:50 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.