1. செய்திகள்

Cyclone:உருவானது தவ்-தே புயல்-நீலகிரி உட்பட4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் அதி கனமழை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
​​Forced heavy rains in 4 districts including Taw-te storm!
Credit : You Tube

லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, தவ்-தே புயலாக மாறி அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தவ்-தே புயல் (Tauktae Cylone)

லட்சத்தீவுப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தவ்-தே (Tauktae) புயலாக மாறியுள்ளது. தற்போது, மத்தியக் கிழக்கு அரபிக்கடல் மற்றும் இதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் வலுப்பெறக் கூடும்.

15.05.21

அதி கனமழை (Very Heavy rain)

இதன் காரணமாக, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு, 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசலாம்.

கனமழை (Heavy rain)

சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு கடலோர மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

16.05.21

கனமழை (Heavy rain)

நீலகிரி தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிதமான மழை (Moderate rain)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

  • சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் தோவாலாவில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

15.05.21

  • குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.05.21

  • மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் கர்நாடகக் கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 70முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் வளம் பெருக்க உதவும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

English Summary: ​​Forced heavy rains in 4 districts including Taw-te storm! Published on: 15 May 2021, 02:13 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.