1. செய்திகள்

தருமபுரி கும்முனூரில் ரூ.4.5 கோடி நிதியில் புதிய வேளாண் கல்லூரி- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தருமபுரி மாவட்டத்தில் சுமார் ரூ.4.5 கோடி நிதியில் புதியதாக வேளாண் கல்லூரி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தருமபுரி மாவட்டம் கும்முனூர் கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் புதியதாக வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான புதிய வேளாண் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரி நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாகவும், கல்லூரி தற்காலிகமாக, மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் சேர்க்கை, உதவி பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

நவீன வேளாண் இயந்திரங்கள் வருகை! - மானிய விலையில் பெற பொறியியல் துறையை அணுக விவசாயிகளுக்கு அழைப்பு!!

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!

PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!

English Summary: Government of Tamil Nadu Released GO for opening new agriculture college in Dharmapuri Published on: 19 February 2021, 04:49 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.