1. செய்திகள்

மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும்: TNPSC உறுதி!

R. Balakrishnan
R. Balakrishnan
TNPSC group 4

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிந்து 7 மாதங்களாகியும் இன்னும் அதன் முடிவுகள் வெளியாகவில்லை.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4)

முந்தைய ஆண்டுகளைவிட அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்பு உட்பட பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடர் தாமதம் நிலவி வருகிறது. குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிடக் கோரி சமூக வலைதளங்கள் வாயிலாக தேர்வர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையும் 9,870 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் படிக்க

ரெப்போ வட்டி உயர வாய்ப்பு: வங்கி கடன் வாங்கியோருக்கு EMI உயரும் அபாயம்!

ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!

English Summary: Group 4 exam result to be released by end of March: TNPSC confirms! Published on: 10 March 2023, 07:35 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.