1. செய்திகள்

இந்த இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - விவரம் உள்ளே

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit: Scroll.in

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகக் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் .

கன மழை எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மன மழையும்

அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை கேரளா கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல்,கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

இதனால் இப்பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலாவில் 18 செ,மீ மழைப் பதிவாகியுள்ளது, அதைத்தொடர்ந்து ஆலங்குடியில் 12 மெ,மீ பேச்சிப்பாறையில் 9 செ,மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க...

PM Kisan முறைகேடு: 13 மாவட்டங்களில் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை!!

பால் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்

ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம் - விவசாயிகள் கவலை

English Summary: Heavy rain warning and thundershowers May occur in Coimbatore, Nilgiris, Tiruchirappalli and other 4 Districts in Tamil Nadu Published on: 07 September 2020, 06:02 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.