ஹோண்டா நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் வெகு விரைவில் புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் 125 சிசி ஸ்கூட்டர் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 160 சிசி பிரிவிலும், மற்றொன்று 300 சிசி அல்லது 350 சிசி இருசக்கர வாகன பிரிவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்தியாவின் 150 சிசி - 200 சிசி இருசக்கர வாகன பிரிவில் பஜாஜ் நிறுவனமே முன்னணி பிராண்டாக இருக்கின்றது. நிறுவனத்தின் பல்சர் பைக்கே இந்த பிரிவில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இதேபோல் 300சிசி மற்றும் 350 சிசி ஆகிய பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் மற்றும் புல்லட் பைக்குகளுக்கே சற்று சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
வெகு விரைவில் அடுத்த தலைமுறை ஹோண்டா ஆக்டிவாவையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது நாட்டில் 6ஜி ஆக்டிவா விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆக்டிவா 7ஜி-யை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா 6ஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே ஃபிரெஷ்ஷான அம்சங்கள் கொண்ட ஆக்டிவா வாயிலாக இந்தியர்களைக் கவர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதேபோல் நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலாகவும் ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இந்த வரவேற்பையே இரட்டிப்பாக்க நிறுவனம் அடுத்த தலைமுறையை களமிறக்க இருக்கின்றது.
English Summary: Honda to field two-wheelers with different cc capacities!Published on: 06 September 2022, 08:37 IST
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments